வெள்ளியங்கிரியில் உள்ள தியானலிங்க ஆலயம் சத்குரு அவர்களால் 1994ல் நிறுவப்பட்டது. அதே வருடத்தில் இங்கு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தான் சத்குரு அவர்கள் தியானலிங்க கோட்பாடுகளைப் பற்றி முதன்முதலாக விவரித்தார்.
கம்பீரமான லிங்க வடிவம் ஒன்று 1996ல் தியானலிங்க ஆலயத்தில் நிறுவப்பட்டது. 1999 வரை இந்தக்கோயில் சத்குரு அவர்களின் பக்தர்களால் மட்டுமே அணுகக் கூடியதாக இருந்தது. நவம்பர் 23, 1999 அன்று இந்தக் கோயிலின் கதவுகள் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டன.
மன அழுத்தத்தையும் வாழ்வின் துயரங்களையும் குறைக்க விரும்பும் மக்கள் மத்தியில் இந்தக் கோயில் மிகுந்த முக்கியத்துவத்தை அடைந்துள்ளது. இந்தக் கோயிலில் நிலவும் சலனமற்ற அமைதியான சூழலால் இந்த இடத்திற்கு தியானம் செய்ய அதிகமான அளவில் மக்கள் வருகின்றனர்.
இந்தக் கோயிலின் புகழுக்குக் காரணம் இது எந்த ஒரு மதத்தையும் பரிந்துரைப்பதாக இல்லாமல், அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் இங்கு வந்து தியானம் செய்வதை வரவேற்பதால் தான்.