வடக்கு கோவாவில் உள்ள கோல்வேல் நகரில், நீங்கள் கோவாவின் மற்ற சுற்றுலாத் தலங்களில் காண்பது போல கடலையும், மணற்பரப்பையும் காண முடியாது. இந்த நகரம் வளம் கொழிக்கும் நெற்பயிர்களின் மத்தியிலே, கேண்டலிம், பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு வடகிழக்கே அமைந்திருக்கும் முக்கியமான கேளிக்கை பகுதியாகும். இந்நகரின் செழுமைக்கும், வளமைக்கும் ஆதாரமாக விளங்குவது சர்போரா நதியே ஆகும்.
கோல்வேல் நகரம் முன்னொரு காலத்தில் போர்த்துகீசியர்கள், டச் மற்றும் மராட்டியர்களுக்கு வணிக மையமாக விளங்கி வந்தது. இன்றும் கூட முந்திரி சாராயத்துக்காகவும், முர்தோஸி எனும் பெண் மீனுக்காகவும் கோல்வேல் நகரம் பிரபலமாக அறியப்படுகிறது.
கோல்வேல் நகரின் கவர்ச்சிக்கு மற்றுமொரு காரணம், 1591-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோல்வேல் தேவாலயமாகும். இந்த கோல்வேல் தேவாலயம் பற்பல பேரரசுகளின் ஆளுகையின் கீழும் மிகச் சிறந்த முறையிலேயே பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
மும்பையிலிருந்து, கோவா வரும் பயணிகள் உங்களுக்கு இடது பக்கத்தில் கோல்வேல் நகரைத்தான் முதலில் காண்பீர்கள். மேலும் சற்று தொலைவு கடந்து போனால் இடது புறம் மாபுசா என்ற நகரும் தென்படும்.
கோல்வேல் நகரம் கோவா விமானம் மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து சற்று தூரமாக இருக்கிறது. எனினும் அந்த இடங்களிலிருந்து கார் மூலம் கோல்வேல் நகரை அடைவது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியம் இல்லை. அதுமட்டுமல்லாமல் கோல்வேல் நகருக்கு அருகில் இருக்கும் மஜோர்டா ரயில் நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.