குவன்சே தேயிலை தொழிற்சாலை நீலகிரி தேயிலை தயாரிப்பில் முதன்மை வகிக்கிறது. நீலகிரிக்குச் செல்லும் பயணம் இங்குள்ள தேநீரின் சுவையைப் பருகாமல் முழுமையடைவதில்லை.
தயாரிக்கப்படும் இடத்திற்கே சென்று உலகில் எங்கும் கிடைக்காத இதன் தனித்தன்மையான சுவையை சுவைப்பதை விட சிறப்பு வேறு என்ன இருக்க முடியும்? குவன்சே தேயிலை தொழிற்சாலையில் இந்த அனுபவம் கிடைக்கிறது.
புதிதாக தயாரிக்கப் பட்ட தேயிலை வாங்கக் கிடைப்பதுடன் இங்கே தயாரித்த தேநீர் குடிக்கக் கிடைக்கிறது. காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை இங்கு வேலை நேரம். இந்த நேரத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தேயிலைச் செடி வளர்ப்பிலிருந்து இறுதியாக தயாரிக்கப் படுவது வரை அனைத்தையும் இங்கு காண முடியும் என்பதால் இது கண்டிப்பாக செல்ல வேண்டிய ஒரு இடமாகும். ஒரு நபருக்கு இங்கு பாத்து ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இதை செலுத்தி நீங்கள் தேநீர் தயாரிப்பது குறித்த சகல விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.