கட்டாரி அருவி நீலகிரியின் மூன்றாவது பெரிய அருவி என்று புகழ் பெற்றது. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் இங்கு அமைந்துள்ளது. குன்னூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் குண்டா சாலையில் 180 மீட்டர் உஅயரம் கொண்டதாக இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
கட்டாரி நீர்வீழ்ச்சியில் விழும் நீரின் விசையில் இருந்து இந்த மின் நிலையம் 1000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இது மற்றும் லா நீர்வீழ்ச்சி ஆகியன நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளன.
மழைக்காலத்தில் மலை உச்சியில் இருந்து அதிவேகமாக விழும் நீர் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இந்த இடத்தின் உயரமும் இதன் சுற்றுப் புறமும் முடிவே இல்லாத உயரத்தில், வானத்தில் இருந்து பூமிக்கு நீர் வீழ்வது போன்ற தோற்றத்தை கட்டாரி நீர்வீழ்ச்சிக்கு அளிக்கிறது.