60 அடி உயரத்திலிருந்து ஆரவாரத்துடன் விழுந்து கொண்டிருக்கும் கார்பெட் நீர்வீழ்ச்சி ராம்நகரில் இருந்து 86 கிமீ தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமாகும. முகாமிடுதல், இன்பசுற்றுலா மற்றும் பறவைகளை கவனிப்பதற்கு மிகவும் ஏற்ற இடமாக இது உள்ளது.
இன்பசுற்றுலா வருபவர்களுக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் வனத்துறையினர் செய்து கொடுக்கின்றனர். 110 கிமீ தொலைவில் காலாதுங்கியில் உள்ள ராம்நகர் வனச்சரகத்தைச் சேர்ந்த இடமாக இந்த நீர்வீழ்ச்சி விளங்குகிறது.
பசுமையான நில அமைப்பு, நீர்வீழ்ச்சியின் ஆரவாரம், பறவைகளின் கீச்சிடும் குரல்கள் மற்றும் அமைதியான சுற்றுச்சூழல் ஆகியவற்றை வழங்கும் இந்த இடம் சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கையுடனுண்டான தொடர்புகளை விரிவு படுத்துவதாக இருக்கும்.
உள்நாட்டுப் பயணிகளுக்கு ரூ.5/- மற்றும் வெளிநாட்டினருக்கு ரூ.10/- என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் இலவசமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளவும், அருவி நீரில் குளிக்கவும் முடியும். இந்த கண்கவரும் இடத்தை பார்வையிடுவதுடன், அருகிலுள்ள இயற்கை நடைபயண அருங்காட்சியகத்திற்கும் சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும்.