கார்பெட் தேசிய பூங்காவிலுள்ள பாட்டில் துன் பள்ளத்தாக்கின் உள்ள பிரபலமான சுற்றுலாத்தலம் தான் திக்காலா ஆகும். இந்த இடத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான ஓய்வு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியும்.
கன்டா முனையின் பின்னணியில் இந்த பள்ளத்தாக்கின் அழகிய காட்சிகளையும் சுற்றுலாப் பயணிகள் காண முடியும். ராம்கங்கா ஆறும் பல்வேறு வழிகளில் இந்த பள்ளத்தாக்கிற்குள் பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது.
திக்காலா சுற்றுலா வளாகம் திக்காலா சௌர் மற்றும் புலாய் சௌர் ஆகிய இரண்டு புல்வெளி நிலப்பகுதிகளை பெருமளவு கொண்டுள்ள இடமாகும். பல்வேறு வழிப்பாதைகளை கொண்டுள்ள திக்காலா சௌர் இந்த பூங்காவிலுள்ள மிகப்பெரிய புல்வெளி நிலமாகும்.
இந்த பாதைகளில் சுற்றுலாப் பயணிகள் மேற்கொள்ளும் சுற்றுப் பயணங்களில் அவர்கள் காட்டு யானை, சிடால், ஹாக் மான்கள், ராஃப்டர் மற்றும் பல்வேறு வகையான பறவைகளையும் காண முடியும்.