கார்பெட் தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான, பிரபலமான செயலாக மீன் பிடிப்பு விளங்குகிறது. மகாஷியர் வகை மீன்களை பிடிப்பதற்கு மிகவும் ஏற்ற இடங்களாக கோசி மற்றும் ராம்கங்கா நதிப்படுகைகள் உள்ளன.
இது மட்டுமல்லாமல், சிறப்பு மகாஷியர் மீன் பிடி சுற்றுப் பயணங்களும் ராம்கங்கா நதியில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஃப்ளை பிஷ்ஷிங் மற்றும் ஸ்பின்னிங் ஆகியவற்றையும் இங்கே பார்வையாளர்கள் அனுபவித்திட முடியும்.
இந்த தேசிய பூங்காவில் ராம்கார்ஹ், பன்சேஸ்வர் மற்றும் பின்சார் ஆகிய இடங்களில் மீன் பிடிப்புகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், மீன் பிடிப்பதற்கான அனுமதியை வனத்துறையிடமிருந்து பெறுவது அவசியம்.
இந்த பூங்காவில் மீன் பிடிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் பைகள், ஸ்ட்ரா ஹேட்ஸ் (Straw Hats), சூரிய ஒளி கண்ணாடிகள், கெட்ஸ் (Keds), நடப்பதற்கான பூட்ஸ்கள் (Waders), ஆன்டிசெப்டிக் கிரீம்கள், பூச்சிகளை விரட்டும் கிரீம்கள், காற்றைத்தடுக்கும் வின்ட்சீட்டர்ஸ், கையுறைகள் மற்றும் சூரியஒளி தடுப்பு உறைகள் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
இந்த தேசிய பூங்காவில் உள்ள ஆறுகளில் மகாஷியர் மீன் பிடிப்புகளுக்கு சென்றுள்ளதாக அந்த பிரிட்டிஷ் வேட்டைக்காரர் தன்னுடைய 'மேன் ஈட்டர்ஸ் ஆஃப் குமவோன்' (Man-Eaters of Kumaon) நூலில் எழுதியுள்ளார்.
கோசி, ராம்கங்கா, மன்டல் மற்றும் கோத்ரி ஆறுகளில் மீன் பிடிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதி பெற வேண்டும். இதற்காக மீன்பிடி தளவாடங்களை ரூ.500/- செலவில் அவர்கள் பெற முடியும்.