கார்பெட் தேசிய பூங்காவில் வருடம் முழுவதும் நீரோடும் ஆறுகளில் ஒன்றாக ராம்கங்கா ஆறு உள்ளது. மழையை நம்பியிருக்கும் இந்த நதி, இந்த தேசிய பூங்காவை அடைவதற்கு முன்னதாகவே சுமார் 100 கிமீ வரை ஓடி வருகிறது.
தேசிய பூங்காவை அடைந்த பின்னர், சமார் 40 கிமீ ஓடி காலஹாரை அடைகிறது. இந்த ஆற்றின் துணையாறுகளாக பாலய்ன், மன்டல் மற்றும் சோனாநாடி ஆகியவை உள்ளன.
மகாஷியர் மீன்கள், கரியால்கள், மக்கர் முதலைகள், நீர்நாய்கள் மற்றும் ஆமைகள் இந்த ஆற்றில் காணப்படுகின்றன. இது மட்டுமல்லாமல், மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் இடம் பெயரும் பறவைகளை கவர்ந்திழுக்கும் இடமாக இந்த ஆறு உள்ளது.
மீன்-கழுகுகள், டெர்ன், நாரைகள் மற்றும் கிங்பிஷர் ஆகிய பறவைகளும் இந்த ஆற்றுப் பகுதியிலுள்ள பறவைகளாகும்.