கார்பெட் தேசிய பூங்காவிற்கான நுழைவாயிலாக ராம்நகர் நகரம் உள்ளது. H.ராம்சேவினால் 1856 மற்றும் 1884-ல் உருவாக்கப்பட்ட இந்த நகரம் நைனிடால் மாவட்டத்தின் நகராட்சி அலுவல் மையமாக செயல்பட்டு வருகிறது.
மகாபாரதத்தில் வடக்கு பாஞ்சாலத்தின் தலைநகரமாக அஹிச்சட்ரா என்ற பெயரில் இந்த நகரம் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
இந்த நகரம் சமோலி மற்றும் மேற்கு குமாவோன் ஆகிய இடங்களுக்கும் நுழைவாயிலாக உள்ளது. பிரிட்டிஷாரால் வளர்த்து விடப்பட்ட பழைய தேயிலை தோட்டங்களுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாக இந்த நகரம் உள்ளது.
மேலும், ராம்நகரில் செய்யப்படும் லிட்சி பண்ணைமுறை உலகம் முழுவதும் புகழ் பெற்றிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு ஏற்ற விடுதிகள் பலவும் இந்நகரத்தில் உள்ளன.