கார்பெட் தேசிய பூங்காவில் வசிக்கும் வனவிலங்குகளுக்கு குடிதண்ணீராக பயன்படும் பருவகால நீரூற்றுகள் தான் சோட்ஸ் என்று அழைக்கப்படுகிறன்றது. இந்த பூங்காவின் சுற்றுச்சூழலை நிர்ணயிப்பதில் இந்நீரூற்றுகள் முக்கியமான பங்காற்றுகின்றன.
இந்த பருவகால நீரூற்றுகள் மட்டுமல்லாமல், வருடம் முழுவதும் தண்ணீரைக் கொண்டுள்ள படேர்பானி, லால்தங், கோதிராவோ, ஜிரானா, தாரா மற்றும் கார்ஜியா ஆகிய நீரோடைகளும் கார்பெட் தேசிய பூங்காவில் உள்ளன.
பெரும்பாலான நீரோடைகளின் கரைகளில் உள்ள புதர்கள் மற்றும் மூங்கில் காடுகளிலேயே புலிகள் பதுங்கி வசித்து வருகின்றன. மழைக்காலங்களில், சோட்ஸில் உள்ள தண்ணீரின் உயரம் அதிகரித்து, கானக சாலைகள் மற்றும் தற்காலிக பாலங்களை அழித்து விடுகின்றன. எனவே தான், இந்த தேசிய பூங்கா மழைக்காலங்களில் மூடப்பட்டிருக்கும்.