காசிவிஸ்வ நாதர் கோவில் தென் காசியில் அமைந்துள்ளது. குற்றாலத்தில் இருந்து 8 கி. மீ தொலைவில் உள்ள இந்த கோவில் கி.பி 1455 ம் ஆண்டு இப்பகுதி ஆட்சியாளரான பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது.
புராணங்களின் படி இந்த மனனன் காசிக்கு செல்ல விரும்பியதாகவும் ஆனால் அந்நகரம் முஸ்லீம்களின் கட்டுப்பாட்டின் இருந்த படியால் காசியில் உள்ள அதே அசல் கோவிலின் மாதிரியின் படியே இந்த கோவிலை கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இக்கோயிலின் தலைமை தெய்வம் காசி விஸ்வ நாதர். 178 அடி உயரம் கொண்ட இந்த கோயிலின் கோபுரம் இதன் தனி சிறப்பு. மாசி மக திருவிழா 10 நாட்கள் தொடந்து நடக்கிறது. ஐப்பசி கல்யாண உற்சவம், நவராத்திரி, மார்கழி திருவாதிரை மற்றும் கார்த்திகை ரூத்ர தீபம் முதலிய இங்கு கொண்டாடப்படும் மற்ற முக்கிய திருவிழாக்கள்.