பூவராக சுவாமி திருக்கோவிலானது எட்டு பெரும் வைணவ தலங்களில் ஒன்றாகும். ஸ்ரீ முஷ்ணத்தில் நாயக்கர் வம்சத்தவர்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் அவர்களின் படங்களை முற்றத்திலுள்ள ஒவ்வொரு தூணிலும் தாங்கி நிற்கிறது.
இந்த கோவிலின் சிறப்பம்சமாக அதன் தோற்றம் சொல்லப் படுகிறது. இதன் வராக அவதார தோற்றம் சுயமாக உருவானது என்று பொருள்படும் ஸ்வயம் வியாக்டஷேத்ரா என்று வழங்கப்படுகிறது.
இந்த கோவில் புருஷசுகாரா மண்டபம் எனப்படும் மண்டபம் ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 17வது நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேர் வடிவ மண்டபத்தை குதிரைகளில் போர்வீரர்கள் இழுத்துச் செல்ல, பின்னால் யானைகள் தொடர்ந்து வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.