கடலூர் துறைமுகம் என்று அழைக்கப்படும் கடல் துறைமுகமானது பரவனாறு மற்றும் கெட்டிலம் ஆறு ஆகிய இரண்டு அறுகளும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. பெரிய கப்பல்கள் கரையில் இருந்து 1 மைல் தொலைவில் நின்று கொண்டு, சிறிய எடை குறைந்த படகுகளின் வழியாக தங்களுடைய சரக்குகளை இறக்குமதி செய்யும் வசதி இத்துறைமுகத்தில் உண்டு.
தண்ணீரின் உயரத்தை நிலையாக வைத்திருக்கும் பொருட்டாக, ஒரு பெரிய பலகை ஒன்று 6 அடி ஆழத்தில் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது. இது மழைக்காலங்களில் 4 அடியாக குறைக்கப்பட்டிருக்கும்.
இந்த துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பழுப்பு நிலக்கரி தாது பெருமளவில் கிடைத்திருக்கிறது. இத்துறைமுகத்திற்கு அருகிலேயே சில எண்ணைய் அரவை ஆலைகளும் உள்ளன.