கட்டாக்கில் உள்ள இந்த நினைவகத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 2010ஆம் ஆண்டு நவீன் திறந்து வைத்தார். நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23 அன்று பொதுமக்களின் பார்வைக்காக இந்த நினைவகம் திறக்கப்பட்டது.
சுதந்திரப் போரில் உயிர்நீத்த வீரர்களை நினைவுபடுத்தும் வண்ணம் திறக்கப்பட்டுள்ள இங்கு தேசப்பற்றும், நன்றி உணர்ச்சியும் நிரம்பி வழிகிறது. இங்கு வீரர்களின் ஏராளமான படங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.