புல்வானி மாதா என்றும் அழைக்கப்படும் இந்த இடம் தயான் குந்த் சிகரத்தின் காலடிகளில் உள்ள காலாடாப் மற்றும் அல்ஹா கிராமங்களுக்கு மத்தியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜுலை மாதத்தில் புல்வானி மாதாவை பெருமைப்படுத்ததும் விதமாக இங்கு நடத்தப்படும் கண்காட்சி பெரும்பான்மையான தொலைதூர சுற்றுலாப் பயணிகளை கவரும் அம்சமாக இருக்கிறது.
150 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், மத்திய கால கட்டிடக்கலையை பயன்படுத்தி கட்டப்பட்டிருப்பதால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
டல்ஹெளசியில் இருந்த நான்கே கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள இந்த பாரா பதர் என்ற இடத்ததை அடைந்திட டாக்ஸிகளை பயன்படுத்தலாம். சாகசத்தை விரும்பும் பயணிகள் அடர்ந்த காடுகளினூடே மலையேற்ற பயணம் செய்தும் இந்த இடத்தை அடையலாம்.