காஞ்சி பஹாரி டல்ஹெளசியின் குறிப்பிடத்தக்க இயற்கை நடைபயணப் (Nature Walk) பகுதிகளுள் ஒன்றாகும். காஞ்சி பஹாரி என்ற வார்த்தைக்கு 'வழுக்கை மலை' என்று பெயர். ஏனெனில் இந்த மலையின் சிகரப் பகுதிகளில் மரங்களையோ அல்லது வேறு வகை தாவரங்களையோ காண முடியாது மற்றும் அதன் உச்சிப்பகுதி வெறும் நிலமாக மட்டுமெ இருக்கும்.
நகரின் மத்திய பகுதியிலிருந்து 1 மணி நேர நடைபயணத் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. இந்த இடங்களில் பயணிகள் அழகான மலைகளைக் காணும் வேளையில், புதிய காற்றினையும் அனுபவிக்க முடியும்.