இந்து மதத்தின் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவை முதன்மை கடவுளாக கொண்டு உருவான இடம் தான் ஹரிராயர் கோவில். இது டல்ஹெளசியின் சென்ட்ரல் பார்க்-ஐ ஒட்டி அமைந்துள்ளது. கற்களால் கட்டப்பட்ட இந்த கோவில் சிக்கார பாணியிலான கட்டிடக்கலையை காட்டுவதாக இருக்கும்.
சதுர்மூர்த்தி என்றழைக்கப்படும் வெண்கல சிலையில் கடவுளின் தரிசனம் இங்கு கிடைக்கும். எட்டு விதமான பொருட்களால் மூன்று முகங்களுடன் செய்யப்பட்டுள்ள இந்த சிலை அந்த காலத்தைச் சேர்ந்த கலைஞர்களின் கைவண்ணத்தை அழகுற காட்டுவதாக இருக்கும்.
இங்குள்ள முதன்மையான கடவுளின் சிலைக்கு மோதிரங்கள், கைக்காப்புகள், தோள் காப்புகள், கிரீடம், நெக்லெஸ், மணிமாலைகள் மற்றும் குண்டலங்கள் அணிவிக்கப்பட்டிருக்கும்.
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, காவி நிற சுவர்களையுடைய இந்த கோவிலில் பிற இந்து கடவுள்களான சிவ பெருமான், சூரியன் மற்றும் அருணன் ஆகியோரின் உருவங்கள் கலைநயத்துடன் செதுக்கப்பட்டிருப்பதும், மற்றும் விஷ்ணு கடவுள் ஆறு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் அமர்திருக்கும் சிற்பமும் காண்பவர்களை சிற்பக் கலையில் லயித்திருக்கச் செய்யும்.