ரங் மஹால், ராஜா உமேத் சிங்கினால் சுரானா மொஹல்லாவில் கட்டப்பட்டுள்ள இந்த இடம் முகலாய மற்றும் ஆங்கிலேய கட்டிடக்கலைகளின் கலப்பு ஆகும். சுற்றுலா பயணிகள் இந்த இடத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயமாக கிருஷ்ண பகவானின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் 18வது நூற்றாண்டைச் சேர்ந்த பஞ்சாபி மலைப் பகுதி ஓவியங்கள் இருக்கின்றன.
இந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த மற்ற அழகான மற்றும் அலங்கார ஓவியங்கள் தற்பொழுது டெல்லி தேசிய மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மியூசியத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள ஹிமாச்சல் எம்போரியத்தில் கிடைக்கும் கைகளால் செய்யப்பட்ட ரூமால்ஸ் என்றழைக்கப்படும் கைக்குட்டைகளையும், மரத்தறியால் நெய்யப்பட்ட சால்வைகள் மற்றும் செருப்புகளையும் வாங்க முடியும்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை திறந்திருக்க கூடிய இந்த எம்போரியத்திற்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.