கும்ப்ஹரியா ஜெயின் கோயில் 12-ம் நூற்றாண்டில் விமல்ஷாவால் கட்டப்பட்டது. இந்தக் கோவில் வளாகத்தில் சமண தீர்த்தங்கரர்களுக்கான மஹவீரர், நேமிநாத், ஸம்பவ்நாத், சாந்திநாத் மற்றும் பர்ஸ்ஹ்வநாத் போன்றவர்களுக்காக கட்டப்பட்ட ஐந்து கோவில்கள் உள்ளன.
இந்தக் கோவில்கள் தனித்தன்மை வாய்ந்த வெள்ளை நிற பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. சாளுக்கிய அரசனான பீம்தேவ்வின் அமைச்சரான விமல் ஷா கட்டிய 360 கோவில்களில் இந்த ஐந்து கோயில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
இந்த கோயில்கள் தரங்கா மலைகளில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. மேலும் இந்தக் கோவில்களில் கடவுளர்கள், தேவதைகள், குதிரை வீரன் மற்றும் இசைக்கலைஞர்களின் சிற்பங்கள் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன். இந்தக் கோயில்கள் தினசர் காலை 6.30 முதல் இரவு 7.30 வரை திறந்திருக்கும்.