தண்டேஷ்வரி கோயில் தண்டேவாடாவின் விசேஷ அடையாளமாக பிரசித்தி பெற்றுள்ளது. 52 சக்தி பீடங்களில் ஒன்றாக வணங்கப்படும் இந்த கோயிலில் தண்டேஷ்வரி எனும் பெண் தெய்வம் வீற்றிருக்கிறது.
தண்டேவாடாவின் குலதெய்வமாக பூஜிக்கப்படும் இந்த தெய்வத்தின் பெயரிலேயே இம்மாவட்டம் அழைக்கப்படுவது ஒரு சிறப்பம்சமாகும்.
புராணிகக்கதைகளின்படி, சதி தேவியின் பல் விழுந்த ஸ்தலமாக இந்த தண்டேவாடா கருதப்படுகிறது. சத்யயுகா எனும் யுகத்தில் இந்த சம்பவம் நிகந்ததாகவும் அதே காலத்தில்தான் ஏனைய சக்தி பீடங்களும் உருவாகின என்றும் கூறப்படுகிறது. ‘தண்ட்’ எனும் பல் விழுந்த இடம் என்பதால் தண்டேஷ்வரி என்று இங்குள்ள தெய்வம் அழைக்கப்படுகிறது.