தஞ்சாவூரிலிருந்து 25 கிமீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கும் கிராமம் தான் பாபநாசம். பாவத்தை நாசம் செய்தல் என்ற நேரடி பொருளில் அமைந்துள்ளது பாபநாசம் என்பதன் பெயர் விளக்கம்.
மிகவும் பிரசித்தி பெற்ற பாலைவனத்தார் சுவாமி கோயில், பாபநாசத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலை சோழ மன்னர்கள் கட்டியிருக்கலாம் என்கின்றனர். இந்த கோயில் மட்டுமல்லாது, நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட உணவுக் களஞ்சியமும் இங்கு உண்டு.
தானியங்களையும், உணவுப் பண்டங்களையும் இங்கு சேமித்து வைப்பதற்காக இதைப் பயன்படுத்தி இருக்கலாம் என்கின்றனர். 36 அடி உயரமும், 86 அடி அகலமும் கொண்ட இக்களஞ்சியம், பெரிய கொள்ளளவை கொண்டது.
இக்களஞ்சியம், சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டதாகும். கிபி 1600 இல் முதல் 1634 வரை உள்ள காலகட்டங்களில் இக்களஞ்சியத்தைக் கட்டியிருக்கலாம் என்கின்றனர். இதன் சிறப்பு உணர்ந்த இந்திய கட்டிடக்கலை ஆய்வு நிறுவனம், இக்களஞ்சியத்தைப் புராதன சின்னமாக அறிவுத்திருக்கிறது.