சோழ சாம்ராஜ்யத்தின் முந்தைய தலைநகராக விளங்கிய ஊர் பழையாறை. இங்கு, சோழர் காலத்தைச் சேர்ந்த, தொன்மை வாய்ந்த கோவில்களை பயணிகள் பார்க்கலாம். அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்றது பழையாறை சோமேஸ்வர திருக்கோவில்.
இக்கோவிலை பழையாறை வடதளி என்றும் அழைப்பர். கும்பகோணத்தில் இருந்து 6 கிமீ தொலைவிலும், தாராசுரமில் இருந்து 3 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள பழையாறை, ஒரு பிரபலமான ஆன்மீக சுற்றுலாத் தலம்.
இவ்வூர் தாராசுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. வடதளி, தென்தளி, மேல்தளி, கீழ்தளி எனும் தொன்மை வாய்ந்த கோயில்களை கொண்ட பழையாறை நகரம் அனைவரும் பார்க்க வேண்டிய ஸ்தலம்.