ராம் ராய் குருத்வாரா என்றழைக்கப்படும் இந்த சீக்கியக்கோயில் 17ம் நூற்றாண்டில் ராம் ராய் எனும் 7வது சீக்கிய குருவால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலுக்கு எல்லாத இனத்தாரும் விஜயம் செய்யலாம். ஹோலி பண்டிகையின் 5 வது நாளின்போது இந்த குருத்வாராவில் வருடாந்திர திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சொல்லப்பட்டு வரும் கதைகளின்படி சீக்கிய குருவாக மாறிய காரணத்தில் இந்த ராம் ராய் குருவை அவரது சொந்த கிராமத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டதாகவும் பின்னர் அவர் டேராடூன் பகுதியில் வசித்து இந்த குருத்வாராவையும் எழுப்பி மறைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
கலையம்சம் பொருந்திய கட்டுமானமாக இந்த குருத்வாரா கோயில் காட்சியளிக்கின்றது. சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்தம் இந்த குருத்வாராவின் மையத்தில் பூஜிக்கப்படுகிறது. பயணிகளுக்கான சில ஓய்வறைகள் இந்த குருத்வாரா வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.