புது டெல்லியின் பிரசித்தமான வைணவக்கோயிலாக இந்த ISKCON கோயில் அமைந்துள்ளது. ஷீ ராதா பார்த்தசாரதி மந்திர் என அழைக்கப்படும் இந்த கோயில் கிருஷ்ணர் மற்றும் ராதைக்காக அமைக்கப்பட்டிருக்கிறது.
புது டெல்லிக்கு கிழக்கே கைலாஷ் பகுதியில் ஹரே கிருஷ்ணா மலை எனப்படும் பசுமையான குன்றின் மீது 1998ம் ஆண்டு இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஷீ ராதா பார்த்தசாரதி மந்திரின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் அச்யுத் கன்விண்டே என்பவரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாட்டிலேயே இதுபோன்ற மிகப்பெரிய கோயில் வளாகம் இதுதான் எனும் பெருமையையும் இந்த ISKCON கோயில் பெற்றுள்ளது.
நான்கு பிரம்மாண்ட தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த கோயில் வளாகத்தில் ஏராளமான கூடங்களும் அறைகளும் நிர்வாகதேவைகள் மற்றும் ஆலய சேவகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன.
எல்லா ISKCON கோயில்களிலும் ஒரு சில நடைமுறைகள் மற்றும் சடங்குகள் தவறாமல் பின்பற்றப்படுகின்றன. ஆறு விதமான ஆரத்தி பூஜைகள் மற்றும் அர்ச்சகர்களுக்கான பக்தி கட்டுப்பாடுகள் இவற்றில் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.
கிருஷ்ண ஜன்மாஷ்டமி, கௌரா பூர்ணிமா, ராம நவமி, கோவர்த்தன பூஜா மற்றும் ராதாஷ்டமி போன்ற திருவிழாக்கள் இந்த கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
டெல்லியின் எல்லா பகுதிகளிலிருந்தும் சுலபமாக சென்றடையும்படியாக போக்குவரத்து வசதிகளை கொண்டிருக்கும் இக்கோயில் தினமும் காலை 4.30மணி முதல் இரவு 9 மணி வரை திறந்தே வைக்கப்படுகிறது.