மில்லன்னியம் இந்திரபிரஸ்தா பார்க் எனப்படும் இந்த பூங்கா அன்புக்குரிய துணையோடு ஏகாந்தமாக பொழுதைக்கழிக்க ஏற்ற அழகுஸ்தலமாகும். கிழக்கு டெல்லி பகுதியில் ‘அவுட்டர் ரிங் ரோடு’ எனப்படும் வெளிவட்ட சாலையின் பாதையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநகர வளர்ச்சி ஆணையகம் இந்த பூங்காவை நிறுவி, 2004ம் ஆண்டில் பொது மக்களுக்காக திறந்துள்ளது.
இந்த மில்லன்னியம் இந்திரபிரஸ்தா பூங்கா பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவை ஸ்மிருதி வான், ஃப்ராக்ரண்ட் கார்டன், போகன்வில்லா கார்டன், டோப்பியரி கார்டன் மற்றும் ஃபோலியேஜ் கார்டன் என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
2007ம் ஆண்டில் தலாய் லாமா, இந்திய லெஃப்டினெண்ட் கவர்னர், சாதுக்கள் மற்றும் கன்யாஸ்தீரிகளால் திறக்கப்பட்ட உலக சமாதான நினைவுத்தூண் ஒன்றும் இந்த பூங்கா வளாகத்தில் உள்ளது.
மில்லன்னியம் இந்திரபிரஸ்தா பூங்கா ரம்மியமான பசுமைச்சூழல் மற்றும் எழிற்காட்சிகள் நிரம்பிய பொழுது போக்கு வளாகமாக பிரசித்தி பெற்றுள்ளது. இதில் ஒரு திறந்தவெளி அரங்கம், உணவு அங்காடி, நீர்வீழ்ச்சி அமைப்பு மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட புல்வெளிகள், மரங்கள் மற்றும் மலர்ச்செடிகள் ஆகியவை நிரம்பியுள்ளன.
இந்த பூங்கா ஸ்தலத்துக்கு அருகிலேயே அமைந்துள்ள ஹுமாயூன் கல்லறை எனும் வரலாற்று சின்னத்தையும் இங்கிருந்தே பார்க்க முடிகிறது. இரவு 8.30 மணி வரை இந்த பூங்கா பொதுமக்களுக்காக திறக்கப்படுகிறது.