புராதன அழகு மிளிரும் இந்த குத்சியா பாக் வளாகம் டெல்லி நகரத்தில் அவ்வளவாக பிரபல்யமாகாத ஒரு சுற்றுலாத்தலமாக வீற்றிருக்கிறது. முகலாய அரசர் முகமது ஷா அவர்களின் மனைவியான நவாப் குத்சியா பேகம் என்ற ராணியால் இந்த வளாகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ராஜநர்த்தகியாக விளங்கிய இவர் பின்னாளில் அரசரால் மணக்கப்பட்டு ராணியாக மாறினார்.
ஒருகாலத்தில் குத்சியா பாக் வளாகத்தில் ஒரு நீரூற்று, ஒரு மசூதி, ஒரு கோடை வாச மாளிகை மற்றும் ஒரு பெரிய அழகிய தோட்டப்பூங்கா ஆகியவை இருந்திருக்கின்றன.
ஆனால் தற்போது பாரசிக பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் மேற்கு வாசல் அமைப்பு மட்டுமே இந்த வளாகத்தில் அழியாமல் நிற்கிறது. இந்த கட்டமைப்பில் சிவப்புக்கற்களால் கட்டப்பட்டுள்ள இரண்டு மாடங்களும் காணப்படுகின்றன.
இந்த குத்சியா பாக் வளாகமானது காஷ்மீரி கேட் ஸ்தலத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது. தற்சமயம் இந்த வளாகத்தின் பெரும்பகுதி வெளி மாநில பேருந்து போக்குவரத்து நிலையத்தின் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், செயிண்ட் ஜேம்ஸ் சர்ச் எனும் கிறித்துவ தேவாலயமும் இந்த குத்சியா பாக் வளாகத்திற்கு அருகிலேயே காணப்படுகிறது.