தசவதாரா ஆலயம் வடஇந்தியாவில் மிகவும் அறியப்பட்ட முக்கிய பழமையான ஆலயம் ஆகும். இந்த ஆலயம் இறைவன் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஏறக்குறைய அழியும் தருவாயில் இருக்கும் இந்த ஆலயத்தில் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதுபோல் நதி தேவதைகளான கங்கா மற்றும் யமுனா ஆகியோரின் சிற்பங்களும் இங்கு காணப்படுகின்றன. மேலும் இந்த ஆலயத்தில் வைஷ்ணவ புராணங்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த ஆலயத்தில் விஷ்ணு, நார் நாராயண் தப்பசியா நிலையில் இருக்கும் சிலையும், பாம்பின் மீது படுத்திருக்கும் சிலையும் அமைந்துள்ளன. இந்த ஆலயத்திற்கு வருடம் முழுவதும் ஏராளமான இந்து சமய பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அதிலும் குறிப்பாக திருவிழா நடக்கும் போது பக்தர்கள் கூட்டம் இங்கு அலைமோதுவதைப் பார்க்க முடியும். வடஇந்தியாவிலேய ஷிக்காராவைக் கொண்ட முதல் ஆலயம் இந்த தசவதாரா ஆலயம் ஆகும். ஆனால் தற்போது பெரும்பகுதி ஷிகாரா அழிந்துவி்ட்டது.