குப்தர்கள் காலத்தில் தியோகார் ஒரு முக்கிய பகுதியாக விளங்கி வந்தது. இந்த பகுதியில் ஏராளமான அகல்வாராய்ச்சிகள் மற்கொள்ளப்பட்டுள்ளதால், இந்த பகுதி அகழ்வாராய்ச்சியன் மையமாகவும் விளங்குகிறது.
இங்கிருக்கும் அகழ்வாராய்ச்சி கலைக்கூடத்தில் இந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய காலத்தில் மக்கள் பயன்படுத்தி வந்த பல பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் குப்த மன்னர்களின் ஆட்சி சிறப்பையும், ஜைன சமயத்தின் எழுச்சியையும் நாம் அறிய முடியும். இந்த கலைக்கூடம் வரலாற்று அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு முக்கிய இடமாக திகழ்ந்து வருகிறது.