தியோகாரில் இருக்கும் கீர்த்திகிரிதுர்கா கோட்டை 1057ல் சண்டாள மன்னரான கீர்த்திவர்மன் என்பவரால் கட்டப்பட்டது. எனினும் கீர்த்திவர்மனுக்கு முன்பே 9 ஆம் நூற்றாண்டில் கன்னோஜைச் சேர்ந்த பிரதிஹாரா மன்னர்களால் இந்த கோட்டை கட்டப்பட்டது என்றும் பின் இது சண்டாள மன்னர்களின் ஆட்சியின் கீழ் வந்தது என்றும் ஒரு சிலர் நம்புகின்றனர். பிற்காலத்தில் இந்த கோட்டை குவாலியரைச் சேர்ந்த சிந்தியா குடும்பத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த கோட்டை அமைந்திருக்கும் மலை பெட்வா ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது. இந்த கோட்டைக்கு ஹதி (யானை) தர்வாசா மற்றும் டில்லி தர்வாசா என்று இரண்டு நுழைவாயில்கள் உள்ளன.
இந்த கோட்டைக்கு வெளியில் பல ஜெயின் ஆலயங்கள் பண்டைய இந்திய வரலாற்றை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன.
பெட்வா ஆற்றுக்குச் செல்ல, நாகர் கணவாய், ராஜ்கட் கணவாய் சித்தி கி குபா கணவாய் என்று மூன்று கணவாய்கள் உள்ளன. இந்த கணவாய்கள் மூலம் பெட்வா ஆற்றுக்குச் செல்லலாம்.