1946-ல் தாகூர் அன்குல்சந்திரா என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த ஆசிரமம் தியோகரின் முக்கியமான தளமாகும். விவசாயம், கல்வி, திருமணம், வரலாறு ஆகிய நான்கு முதன்மையான மூலங்களை இங்கிருப்பவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
ஆரிய தர்மத்தை போதிக்கும் இந்த ஆசிரமத்தில் அருங்காட்சியகம் ஒன்றும், வனவிலங்கு சரணாலயம் ஒன்றும் உள்ளது. பல இலவச மருத்துவமனைகளையும், பள்ளிகளையும் உருவாக்கியுள்ள இந்த ஆசிரமத்திற்கு அச்சுதொழிலும், அச்சகமும் உண்டு.