பயணிகள் தேவராயனதுர்க்காவுக்கு வருகை தரும்போது இந்த சஞ்சீவராயா கோயில் எனும் ஸ்தலத்தையும் தரிசிப்பது சிறந்தது. இது ஹனுமானுக்காக எழுப்பப்பட்டிருக்கும் கோயிலாகும்.
இந்த புண்ணியத்தலத்தில் கூப்பிய கரங்களுடன் நிற்கும் ஹனுமான் சிலையை பக்தர்கள் தரிசிக்கலாம். லக்ஷ்மி நரசிம்மர் கோயிலுக்கு முன்னரே இந்த சஞ்சீவராயா கோயில் கட்டப்பட்டதாக உள்ளூர் நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.