தேவராயனதுர்க்காவுக்கு வருகை தரும் பயணிகள் இந்த யோகநரசிம்மர் கோயிலை கண்டிப்பாக தரிசிக்க வேண்டும். இந்த கோயில் மலை உச்சியில் அமைந்துள்ளது.
ஆக்கக்கடவுளான பிரம்மாவானவர் இந்த புண்ணிய ஸ்தலத்தை சிருஷ்டித்ததாக பிரசித்தமான புராணக்கதை சொல்லப்படுகிறது. இந்த தலத்தில் பிரம்மாவின் 1000 ஆண்டு தவத்தினை மெச்சி ஷீ மஹாவிஷ்ணுவின் அவதாரமான யோக நரசிம்மர் காட்சியளித்ததாக ஐதீகமாக சொல்லப்படுகிறது.
இந்த கோயில் ஸ்தலத்தில் திருக்குளமான கல்யாணி தீர்த்தத்தை பயணிகள் காணலாம். இது யோகநரசிம்மர் கோயில் வளாகத்திலேயே அமைந்துள்ளது. உள்ளூர் ஐதீகத்தின்படி இந்த கோயில் கருவறையிலிருந்து ஒரு நீரோடை புனித தீர்த்தத்துடன் இணைவதாக நம்பப்படுகிறது.
இந்த கோயில் ஸ்தலத்தின் மேலிருந்து கீழே துர்க்கடஹள்ளி எனும் கிராமத்தில் உள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த வித்யாஷங்கர்ஸ்வாமி கோயிலை பயணிகள் நன்றாக பார்த்து ரசிக்கலாம்.