தலாய் மாவட்டத்தின் மிக முக்கியமான கோவில்களில் லாங்க்தரை மந்திர் ஒன்றாகும். கொக்பொராக் மொழியில் லாங்க்தரை என்றால் சிவன் என பொருள். அகர்டலாவில் இருந்து இக்கோவில் 102கிமீ தொலைவில் உள்ளது.
சிவபெருமான் தன் வீடான கைலாச மலைக்கு பயணம் செய்தபோது இங்கு ஓய்வெடுக்கும் பொருட்டு கால் பதித்ததாக நம்பப்படுகிறது. அதிலிருந்து புகழ்பெற்ற இவ்விடத்தில் கோவிலும் எழுப்பட்டு புகழ்பெற்று விளங்குகிறது.
இன்று இக்கோவிலும் அதைச் சுற்றி உள்ள இடமும் பெரிதாக மதிக்கப்பட்டு மக்கள் அனைவராலும் போற்றப்படுகிறது.
லொங்தரா என்றால் பெரும் பள்ளத்தாக்கு என்றும் பொருள். இக்கோவிலை அடையும் சாலையோரங்களில் கும்பி என்ற வகை பூக்கள் பூக்கின்றன. கோவில் மட்டுமல்லாது அதைச் சுற்றியுள்ள இடமும் அமைதியுடன் திகழ்கிறது.
வியாரமயமாகிவிட்ட உலகில் இருந்து விலகி அமைதியாக இயற்கை எழிலுடன் தோற்றமளிக்கும் இவ்விடம் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய இடமாகும்.