டோக்ரி சன்ச்ரா தரம்கர்ரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆர்ப்பரித்துக் கொட்டும் இந்த நீர்வீழ்ச்சி பசுமையான காடுகளுக்கும் மலைகளுக்கும் நடுவே அமைந்துள்ளது.
மலையின் உச்சியில் இருந்து கொட்டும் அருவி தரையில் ஒரு குளமாக வந்து விழும் அந்த முழு பரப்பு காட்சியை பார்க்கும் போது மனதை பறிகொடுக்காமல் இருக்க முடியாது.
தீரச்செயல் புரிய விரும்புபவர்கள் இந்த இடத்திற்கு ட்ரெக்கிங் மேற்கொள்ள வருவார்கள். வருடம் முழுவதும் இந்த இடத்தில் வானிலை இதமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். ஆனால் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில வருடப் பிறப்பு விடுமுறையில் இங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதும்.