தரம்கர்ரில் அமைந்துள்ள ஸ்ரீ ஆரோபிந்தோ ரெலிக்ஸ் மையத்தில் ஸ்ரீ ஆரோபிந்தோ மற்றும் ஸ்ரீமா அவர்கள் உடம்பின் ஒரு பகுதி (நகங்கள், தலைமுடி போன்றவைகள்) பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இது பிப்ரவரி 4, 2002-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த ரெலிக் மையம் ஸ்ரீ ஆரோபிந்தோ பதச்சக்ரா என்ற ஆராய்ச்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறது. இங்கே ஸ்ரீமா மற்றும் ஸ்ரீ ஆரோபிந்தோவின் தத்துவங்கள் கற்பிக்கப்படுகின்றன.
அதே போல் இங்கே கல்வி மையம் ஒன்றும் இயங்குகிறது. இதில் ஸ்ரீமா மற்றும் ஸ்ரீ ஆரோபிந்தோவின் தத்துவங்கள் தற்கால சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் எடுத்துரைக்கப்படுகின்றன.
இந்த ரெலிக் மையத்தை சுற்றி பராமரிக்கப்படும் அழகிய பூந்தோட்டம் ஒன்று உள்ளது. ஸ்ரீமாவின் ஆசீர்வாதங்களை பெறுவதற்கும் இந்த அமைதியான சூழலில் தியானம் செய்வதற்கும் எண்ணற்ற பக்தர்கள் இங்கு வருவதுண்டு.
தியானம் செய்ய சரியான சூழலை ஏற்படுத்த இந்த மையத்தின் உள்ள அனைத்து பகுதிகளிலும் மரண அமைதி காக்கப்படும். இந்த வளாகத்திற்குள் ஒரு விற்பனை அலுவலகமும் உள்ளது. இங்கே ஸ்ரீ ஆரோபிந்தோவின் கோட்பாடுகள் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கிச் செல்லலாம்.