தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த மேட்டூர் அணை காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணைகளில் ஒன்றாக மேட்டூர் அணை விளங்குகிறது.
இந்த அணையில் தயாரிக்கப்படும் மின்சாரம் தருமபுரி மாவட்டும் முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது. மேட்டூர் நகரத்தில் அமைந்திருக்கும் இந்த அணை சமய ரீதியலான முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து மேட்டூர் அணைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டு இந்த அணையில் ஆடிப்பெருக்கு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். இந்த மேட்டூர் அணை ஸ்டான்லி நீர்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அணையில் இரண்டு ஹைட்ரோ மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.