தர்மஸ்தாலா கோயில் ரத்னகிரி குன்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஜைன மதத்தின் முன்னோடியான பிரமான பெர்கடே என்னும் துறவியால் 500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு முழுவதும் தங்கத்தினால் ஆன லிங்கம் ஒன்று இருக்கிறது. சிவபெருமானின் அவதாரமான ஸ்ரீ மஞ்சுனாதேஸ்வர அன்னப்ப சுவாமி இக்கோயிலின் முதன்மை கடவுளாகும்.
தர்மஸ்தாலா கோயிலில் உள்ள லிங்கம் மங்களூர் அருகே இருக்கும் கத்ரி என்னும் ஊரிலிருந்து எடுத்து வரப்பட்டது. பயணிகள் லிங்கத்தின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் விஷ்ணுவின் அவதாரமான நரஸிம்ஹ சாலிகிராமத்தையும் தரிசிக்கலாம். மேலும், கோயிலின் கருவறைக்குள்ளே பார்வதி மற்றும் மகா கணபதியின் சிலைகளையும் காணலாம்.
இது தவிர கோயிலுக்குள்ளே, தர்ம தேவதைகள் என்று அழைக்கப்படும் கன்னியாகுமாரி, கலர்க்கை, கலாரகு, குமாராஸ்வாமி ஆகிய சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் உள்ள கோயில்களை போல் தர்மஸ்தாலா கோயிலின் உள் விமானமும் மரத்தால் செய்யப்பட்டது. பயணிகள் கோயிலுக்கு காலை 6 முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 6.30 மணியிலுருந்து 8.30 மணிவரையிலும் வரலாம்.