“மைதாம்” என்பது சுடுகாடு என்று அர்த்தப்படும் ஒரு அஹோம் சொல்லாகும். ‘மை’ என்றால் ஓய்வு என்றும் ‘தாம்’ என்றால் இறந்து போன மனிதர் என்றும் பொருள்படுகின்றன.
பெரும்பாலான மைதாம்கள் அஹோம் ஸ்வர்கோதியோஸின் ஆட்சிக்காலத்தின் போது தான் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுள், பாகிகோவா மைதாம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைதாம் ஆகும்.
பாகிகோவா மைதாம், பாகிகோவா தஷரத் தொவேரா போர்ஃபூகான் என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். போர்ஃபூகான் என்பது அஹோம் படைகளின் தளபதிக்கு வழங்கப்பட்ட ஒரு பட்டமாகும்.
பாகிகோவா தஷரத் தொவேரா போர்ஃபூகான், ராஜேஸ்வர் சிங்காவின் ஆட்சிக்காலத்தின் போது படைத்தளபதியாக பணியாற்றியுள்ளார். பாகிகோவா மைதாம் கோவாங் தேயிலைத் தோட்ட வளாகத்தினுள் அமைந்துள்ளது. எனினும், தற்போது பாகிகோவா மைதாம் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.
பாகிகோவா மைதாமுக்கு அருகிலேயே அமையப்பெற்றுள்ள மேலும் மூன்று சிறிய மைதாம்களும் தற்போது சிதைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இவை தவிர, இன்னும் பல சிதிலமைடைந்த மைதாம்கள், கோவாங் தேயிலைத் தோட்டத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிதைந்து போன நிலையில் காணப்படுகின்றன.
திப்ருகாரில் ஏகப்பட்ட மைதாம்களை காண முடிகிறது. இவற்றுள் பார்பருவா மைதாம், சோருமெக்லோ மற்றும் போர்மெக்லோ மைதாம் மற்றும் லெகாய் சேட்டியா மைதாம் ஆகியவை புகழ் பெற்ற சில மைதாம்களாகும்.