பார்பருவா மைதாம் திப்ருகாருக்கு தெற்குப்புறத்தில் சில கிலோமீட்டர் தொலைவில், தேசிய நெடுஞ்சாலை 37 –இல் அமைந்துள்ளது. அருகருகாக அமைந்துள்ள இரண்டு மைதாம்களும் பார்பருவா மைதாம் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. மைதாம் என்ற அஹோம் வார்த்தைக்கு சுடுகாடு என்று அர்த்தமாகும்.
இந்த சுடுகாடு சிதிலமடைந்து காணப்படுவதால், இவை பற்றி அதிகமாக அறியப்படவில்லை. எனினும், பிரபலமான வரலாற்று ஆர்வலரான சர்பானந்தா ரகுமார் அவர்களின் கூற்றுப்படி, இந்த இரு கல்லறைகளும் தேகா திஹிங்கா பார்பருவா மற்றும் பூரா திஹிங்கா பார்பருவா ஆகிய இருவருக்கும் உருவாக்கப்பட்டவையாகும்.
இவ்விருவரைப் பற்றிய உருப்படியான தகவல்கள் கிடைக்கவில்லையென்றாலும், இவ்விரு மைதாம்களை பார்க்கும்போது, இவை நிச்சயமாக அஹோம் ராஜ்யத்தில் உயர் பதவி வகித்த இரு அதிகாரிகளுக்காக கட்டப்பட்டது என்று யூகிக்க முடிகின்றது.
இந்த உயர் அதிகாரிகளின் கல்லறைகள் தவிர்த்து, இரு சிறு மைதாம்களும் காணப்படுகின்றன. இவை இறந்து போன படைவீரர்களுக்காகக் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பார்பருவா மைதாமுக்கு வருகை தருவதன் மூலம் பழங்காலத்தில் இப்பகுதியின் பெரும்பாலான பாகத்தை ஆண்ட வளம் பொருந்திய அஹோம் ராஜ்யத்தைப் பற்றிய நுட்பமான தெளிவைப் பெறலாம்.