திப்ருகாரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் ஜோக்காய் பாதுகாப்பு காடுகளில் அமைந்திருக்கும் ஜோக்காய் பொட்டானிக்கல் கார்டன் புலம்பெயர் பறவைகளுக்காக அஸ்ஸாம் மாநிலத்தில் பிரத்தியேகமாக அறியப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் மன்கோட்டா காம்திகாட் சாலையில் அமையப்பெற்றுள்ள இந்தப் பூங்கா உயிர் திசுக்களான 'மூலவுயிர்முதலுரு'வை சேகரிக்கும் மையமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் மழைக்காடுகள் மாதிரி பிரிவு, தி ஆர்ச்சிட் ஹவுஸ், மருத்துவத் தாவரங்கள் பிரிவு என்று பல்வேறு பகுதிகளை கொண்டது.
ஜோக்காய் பொட்டானிக்கல் கார்டன் தாவர வளம் மிகுந்த பகுதியாக விளங்குவதோடு, விலங்குகளையும் இங்கு அதிக அளவில் பார்க்க முடியும். இங்கு வரும் பயணிகள் ஓய்யாரமாக யானைச் சவாரி செய்து காடுகளின் செழுமையையும், அழகையும் ஆசை தீர பார்த்து மகிழலாம்.
மேலும் படகுச் சவாரி உள்ளிட்ட பொழுபோக்கு அம்சங்களை கொண்டுள்ள இந்தப் பூங்கா ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஈர்த்து வருகிறது.