மோதர்காட் சத்ரா, தின்ஜோய் சத்ராவின் விரிவாக்கமாகும். இது, தின்ஜோய் சத்ராவின் தலைமை குருக்களான சித்தானந்ததேப் தின்ஜோய் அவர்களின் சகோதரராகிய சந்திரகாந்ததேப் அவர்களால் நிறுவப்பட்டதாகும்.
மோதர்காட் சத்ரா, திப்ருகார் மாவட்டத்தின் சௌபா நகரியத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது நகரின் பிற பகுதிகளோடு உள்ளூர் டாக்ஸிகள், ரிக்க்ஷாக்கள் மற்றும் பேருந்துகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
தின்ஜோய் சத்ராவைப் போன்றே மோதர்காட் சத்ராவும் உள்ளூர்வாசிகளால் மட்டுமின்றி இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அனைவராலும் பெரிதும் போற்றப்படுகிறது.
ஆரம்ப காலத்தில், முக்கியமாக அஹோம் ஆட்சியின் போது, வெறுமனே ஆன்மீக ஸ்தாபனங்களாக மட்டுமின்றி அஹோம்களின் கலாச்சாரத்தைப் பற்றி பொதுமக்களுக்கு கற்பிக்கக்கூடிய ஸ்தலங்களாகவும் செயல்படும் வகையில் இந்த சத்ராக்கள் உருவாக்கப்பட்டன.
இன்று அஸ்ஸாமின் இதர சத்ராக்களுடன் மோதர்காட் சத்ராவும் அப்பொற்காலத்தின் ஞாபகார்த்தமாய் எஞ்சி நிற்கின்றது. இவை சமூகக் கலாச்சார மையங்களாக பெரும்பாலும் மாற்றப்பட்டுவிட்டன.