இரண்டாம் உலக யுத்தத்தில் இறந்த வீரர்களை புதைப்பதற்காக இந்த கல்லறை கட்டப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு உட்பட்ட வடமேற்கு இந்தியா பர்மா யுத்தத்திற்கான களமாக பயன்பட்டது. பர்மா எல்லைக்கு அருகில் டிக்பாய் இருந்ததால் தற்காலிக ராணுவ மருத்துவமனை கட்டப்பட்டது.
காமன்வெல்த் யுத்த கல்லறை நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் டிக்பாய் கல்லறையில் 200கல்லறைகளுக்கும் மேல் இருக்கிறது. ஆரம்பத்தில் 70 கல்லறைகள் இருந்தது. பின்னர் பனிடோலா, டின்சுகியா, மார்கரிடா, ஜோர்ஹாட், லெடோ ஆகிய கல்லறைகளும் இங்கே நிர்வாக வசதிக்காக சேர்க்கப்பட்டன.
நன்றாக நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த கல்லறைக்கு வரும் பயணிகளை இரண்டாம் உலக யுத்த நினைவிற்கு இட்டுச் செல்கிறது இவ்விடம்.
பூகம்பம், நிலச்சரிவு ஆகிய இயற்கை சீற்றங்களின் காரணமாக 1950ல் பல கல்லறைகள் இங்கு கொண்டவரப்பட்டன. தற்போதைய இடம் இயற்கை சீற்றங்கள் எதுவும் வராத இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.