திமாபூரின் முக்கியமான சுற்றுலாதளமாக அதன் உப பகுதியான மெட்ஜிஃபெமா விளங்குகிறது. 'செடியில் இருந்து வரும் நீர்' என்ற அர்த்தத்தில் கஸ்பாணி என்றழைக்கப்பட்ட இவ்விடம் கடல் மட்டத்தில் இருந்து 360கிமீ உயரத்தில் பள்ளத்தாக்கிலும் அல்லாமல் குன்றிலும் அல்லாமல் நடுவில் அமைந்திருக்கிறது.
திமாபூர் மற்றும் கோஹிமா ஆகிய நகரங்களுக்கு அருகில் அமைந்திருக்கும் மெட்ஜிஃபெமா அதன் அமைப்பிற்காக புகழ்பெறு விளங்குகிறது. திமாபூரில் இருந்து 33கிமீ தொலைவிலும் கோஹிமாவில் இருந்து 44கிமீ தொலைவிலும் இவ்விடம் அமைந்துள்ளது.
இங்கிருக்கும் விவசாய மற்றும் கிராம வளர்ச்சிக் கல்லூரி, நாகாலாந்து பல்கலைக்கழகம் ஆகியவை இந்நகரத்தில் முக்கிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன.
அண்ணாச்சிப் பழத்திற்கு புகழ்பெற்ற மெட்ஜிஃபெமா நகரத்தைச் சுற்றி ஓய்யிம்கும், ஓயிம்டி, டரோகர்ஜன் ஆகிய கிராமங்கள் அமைந்திருக்கின்றன. இக்கிராமங்கள் அண்ணாச்சிப் பழ கிராமங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.