திமாபூரில் இருந்து 15கிமீ தொலைவில் அமைந்துள்ளது நிச்சுகார்ட் கிராமம். இன்று சும்முகெடிமா என்று வழங்கப்படும் இவ்விடம் இங்கு நிலவும் பல்லுயிர் கலாச்சாரத்திற்காக புகழ்பெற்று விளங்கிறது.
நாகாலாந்தின் உண்மையான சூழலை அறிய விரும்புவோர் இவ்விடத்திற்கு அவசியம் செல்ல வேண்டும். திபு-குகி மலைகளில் அடிவாரத்தில் இருக்கும் இக்கிராமம் 1866ல் துணை ஆணையரின் தலைமிடமாக உருவாக்கப்பட்டது. நாகாலாந்தின் முதல் பள்ளியும், மருத்துவமனையும் அமையப்பெற்ற இடம் என்ற தனிப்பெருமையும் இவ்விடத்திற்கு உண்டு.
பல அரிய வகையான செடிகளுடனும், மிருகங்களுடனும் இருக்கும் இவ்விடத்தில் 19ஆம் நூற்றாண்டு நாகாலாந்தின் அழகைக் காணலாம். முக்கிய சுற்றுலாத்தளமாக விளங்கும் ஒரு சிறிய நீர்வீழ்ச்சியும் இங்கு அமைந்துள்ளது. அங்கமி மற்றும் கொனொமா பழங்குடி இன மக்கள் இங்கு வசிக்கிறார்கள்.