ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 1107 மீ உயரத்தில் தோடா மாவட்டம் அமைந்துள்ளது. 1948-ம் ஆண்டு உத்தம்பூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்ட அந்தஸ்தை இம்மாவட்டம் பெற்றது. தற்போதைய பாகிஸ்தானில் இருக்கும் முல்தான் பகுதியைச் சேர்ந்த பாத்திரம் செய்யும் தொழில் புரிந்த தீடா என்பவரின் பெயரால் இந்நகரத்திற்கு தோடா என்ற பெயர் பெற்றது.
இயற்கையின் மத்தியில் அமைந்துள்ள மிகச் சரியான சுற்றுலா தலமான தோடாவில் படேர்வா, சிந்தா பள்ளத்தாக்கு, சியோஜ் பசும் புல்வெளிகள் மற்றும் பால் பாத்ரி ஆகியவை மற்றும் பல கண்கவர் சுற்றுலாப் பார்வையிடங்கள் உள்ளன. ஒவ்வொரு வருடத்தின் ஆகஸ்ட் மாதங்களிலும் நடக்கும் கைலாஷ் புனித யாத்திரைக்காக இந்துக்களால் மிகவும் முக்கிய தலமாமான படேர்வா கருதப்படுகிறது.
படேர்வாவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6500 அடி உயரத்தில் அடர்த்தியான மற்றும் கண்கவரும் ஊசியிலை காடுகளை கொண்ட சுற்றுலா தலமாக சிந்தா பள்ளத்தாக்கு உள்ளது.
இதே பகுதயில் இருக்கும் சியோஜ் பசும் புல்வெளிப் பகுதிகள் 'படேர்வாவின் கிரீடத்தில் உள்ள வைரம்' என்ற வர்ணணைக்கு சொந்தமான இடமாகும். இந்த பசும் புல்வெளிகளைச் சுற்றிலும் பெரிய பனி படர்ந்த மலைகள் உள்ளன.
வெளியுலகத்தால் நன்கு அறியப்பட்ட சில கோவில்களை கொண்டுள்ள இடமாக தோடா விளங்குகிறது. இவற்றில் குப்த கங்கா கோவில், ஷீட்லா மாதா கோவில், ஆலாபனி கோவில் மற்றும் நக்னி மாதா கோவில் ஆகியவை பிரபலமான மத வழிபாட்டுத் தலங்களாகும். சுபர் நாக் கோவில், துபு நாக் கோவில் மற்றும் வாசுகி நாக் கோவில் ஆகியவை படேர்வாவின் புகழ் பெற்ற கோவில்களாகும்.
இந்த சுற்றுலா தலத்தை அனைத்து வகையான முதன்மையான போக்குவரத்து வசதிகளின் வழியாகவும் எளிதில் அடைந்து விட முடியும். 231 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ஸ்ரீ நகர் விமான நிலையம் தோடவிற்கு மிகவும் அருகிலிருக்கும் விமான நிலையமாகும்.
இந்த விமான தளம் மும்பை மற்றும் டெல்லியுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இவ்விமான தளத்திற்கு வெளியிலேயே சுற்றுலாப் பயணிகள் வாடகை கார்களை அமர்த்திக் கொண்டு தோடாவிற்கு பயணத்தை தொடர முடியும்.
220 கிமீ தொலைவிலிருக்கும் ஸ்ரீ நகர் இரயில் நிலையம் தோடாவிற்கு அருகிலிருக்கும் இரயில் நிலையமாகும். இந்த இரயில் நிலையம் இந்திய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளும், பிற சொகுசு பேருந்துகளும் ஸ்ரீ நகரிலிருந்து தோடாவிற்கு இயக்கப்பட்டு வருகின்றன.
தோடாவில் வருடம் முழுவதுமே நல்ல குளுமையான பருவநிலையே நிலவி வருகிறது. சுற்றுலா சென்று ஊர் சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்றதாக இருக்கும் மார்ச் முதல் நவம்பர் மாதங்களில் தோடாவிற்கு வரலாம். குளிர்காலங்களில் இங்கு பனிப்பொழிவு சகஜமானது.