படேர்வாவில் உள்ள குப்த கங்கா கோவில் தோடா மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மதத்தலங்களில் மிகப் பிரபலமான ஒன்றாகும். மகாபாரதத்தில், பாண்டுவின் மகன்களான பாண்டவர்களை நாடு கடத்திய போது, அவர்கள் சிறிது காலம் இங்கே தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.
பாண்டவர்களில் பலசாலியான பீமரின் பாதச்சுவடுகளை இங்கிருக்கும் கற்களில் இன்றும் காண முடிகிறது என உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.