கக்ஹாலில் நடத்தப்படும் மேளா பாட், படேர்வாவின் மிகவும் புகழ் பெற்ற கண்காட்சிகளில் ஒன்றாகும். கக்ஹாலின் வரலாறு, 16-ம் நூற்றாண்டில் இந்தியாவை ஆட்சி செய்த முகலாய அரசர் அக்பர் காலத்தை சேர்ந்ததாகும்.
மத்திய காலத்தில் தொடங்கப்பட்ட கண்காட்சியான இதனை தோடா மாவட்டத்தின் மிக முக்கியமான கண்காட்சிகளில் ஒன்றாக சொல்ல முடியும். வண்ண மயமாக மூன்று நாட்களுக்கு நடத்தப்படும் இந்த கண்காட்சியில் பாரம்பரிய உடைகளும், ஆட்டங்களும் பிரமாதப்படுத்துவதாக இருக்கும்.