துபு நாக்கின் சகோதரியாக கருதப்படும் பெண் நாக கடவுளின் கோவிலாக நாக்னி மாதா கோவில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் வரும் இந்து மதத்தின் இரண்டாவது மாதமான பைசாகியின் முதல் நாளில், பெருந்திரளான மக்கள் ஊர்வலமாக இந்த கோவிலுக்கு வருவது வழக்கம்.
இந்நாளில் வரும் பக்தர்களுக்கு இங்கு பலியிடப்படும் ஆடுகளின் இறைச்சியானது பிரசாதமாக படைக்கப்பட்டு லங்கார் என்ற இலவச சமையல் விருந்து மூலமாக வழங்கப்படுகிறது.