இந்து மதத்தில் வரும் கொடும் நோய்களின் கடவுளாக கருதப்படும் ஷீட்லாவிற்கான, ஷீட்லா மாதா கோவில் ரெஹோஸ்ரா என்ற சிறுமலையின் மீது அமைந்துள்ளது. பழமையான ஷீட்லா மாதாவின் சிலையொன்றை கொண்டிருக்கும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்து பிரார்த்தனை செய்து செல்வார்கள்.
இந்து பண்டிகையான நவராத்திரியின் 8-வது நாளில் இங்கு நடக்கும் திருவிழாவின் போது, பக்தர்கள் ஆடுகளை பலியிட்டு அந்த இறைச்சியை புனித உணவு அல்லது பிரசாதமாக அளிப்பார்கள்.