துபாரே வரும் பயணிகள் கட்டாயம் யானைகள் பயிற்சி முகாமுக்கு செல்ல வேண்டும். இங்கு வனத்துறையினர், குரபா என்ற பழங்குடி மக்களை கொண்டு யானைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட நிறைய யானைகள் மரங்களை தூக்கிச் செல்லவும், இதர பல வேலைகளை செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த யானைகளை கொண்டு நடத்தப்படும் முகாம்கள் பயணிகளுக்கு நல்ல பொழுதுபோக்காக இருப்பதோடு, அவர்களுக்கு இந்த விலங்குகளை பற்றி தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
இதன் மூலம் யானைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எவ்வளவு அவசியம் என்பதை முகாம்களில் கலந்துகொள்ளும் மக்கள் நன்கு அறிந்து கொள்வார்கள். அதோடு யானைகளை எவ்வாறு பயிற்றுவிக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்ப்பதுடன், பயணிகளே தங்கள் கைகளாலே யானைகளுக்கு உணவும் கொடுக்கலாம்.
துபாரேவின் யானைகள் முகாம்களில் உள்ள தொழிற்சார் சூழலியலாளர்கள், துபாரேவின் வரலாறு,சுற்றுச்சூழல், யானைகள் பற்றியெல்லாம் பயணிகளுக்கு விரிவாக எடுத்துச் சொல்வார்கள். அத்துடன் வனத்துறையினர் ஏற்பாடு செய்யும் யானை சவாரியிலும், பரிசல் பயணத்திலும் பயணிகள் மகிழ்ச்சியுடன் பொழுதை களிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் இங்கிருந்து இறுப்பா அருவி செல்லும் பாதை நடை பயணம் செல்ல விரும்புவோருக்கு ஏற்ற இடமாக இருப்பதுடன், கட்டுமரப் பயணத்துக்கும் நிறைய வாய்ப்புகளை கொண்டிருக்கிறது.